வெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி…

இந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து 3 குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர்.

நேற்றைய தினம் இந்தோனேசியாவில் திருமணத்திற்கு சென்றவர்கள், ஜாவா தீவில் இருந்து படகு ஒன்றில் மதுரா தீவிற்கு புறப்பட்டனர். படகில் 50 கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். படகு சுமெனப் தீவுப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்தது. படகிலிருந்தோர் அனைவரும் ஆற்றில் மூழ்கினர். பேரிடர் முகாமைத்துவ குழுவினர் விரைந்து செயற்பட்டதில், 39 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க