உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புனர்வு நடை பயணம் கிளிநொச்சியில்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புனர்வு நடை பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு பயணம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடைபயணம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஆரம்பமாக ஏ9 வீதிஊடாக மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

கிராமங்களில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கோரியும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை கட்டுப்படுத்த கோரியும் குறித்த விழிப்புனர்வு பயணம் முன்னெடுக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க