உள்நாட்டு செய்திகள்புதியவை

மன்னார் மக்களின் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை: மனித உரிமை ஆணைக்குழு

மன்னார் மக்களின் முறைப்பாடுகள் குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலய ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நிலை நாடு முழுவதும் காணப்படுவதால் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாகவும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாகவும் காணி விடயங்கள் தொடர்பாகவும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தனி நபர்களாகவும் பொது விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபருடனும் இராணுவம் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகலுடனும் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

 

கருத்து தெரிவிக்க