உள்நாட்டு செய்திகள்புதியவை

போராட்டக் களத்துக்கு வியாழேந்திரன் நேரில் சென்று ஆதரவு!

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் போராட்டக் களத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

முற்போக்கு தமிழர்கள் அமைப்பினரால் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்புக்குச் சென்ற அவர் அங்கிருந்து போராட்டக்களத்திற்கு பேரணியாகச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கல்முனையில் சர்வ மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் நேற்று முன்தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க