புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்துள்ளார்.

2020 நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று முறைப்படி புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் அவர் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

2-வது முறையாக தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகம் செல்வாக்கு செலுத்திய ஒர்லண்டோவில் அவர் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 வருடங்கள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க