உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மாணவர்களுக்கு“டெப்லெட்ஸ்”- அமைச்சரின் முடிவுக்கு ஜனாதிபதி இணக்கமில்லை.

பாடசாலை பிள்ளைகளுக்கு இலத்திரனியல் “டெப்லெட்ஸ_”களை வழங்குவதற்கு மீண்டும் ஜனாதிபதி தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்துக்காக 2275 மில்லியன் ரூபாய்களை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த திட்டத்தின் பரீட்சாத்த மாதிரிப் பணிகள் முதலில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் திட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த திட்டத்தின்கீழ் 189000 டெப்லெட்ஸ்களை வழங்கமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

கருத்து தெரிவிக்க