உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

திருமலை அக்போபுர பகுதியில் குழுக்களுக்கிடையில் மோதல்!

திருகோணமலை அக்போபுர பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது நால்வரை இன்று(18) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர,கித்துல்ஊற்று,தல்கஸ்வெவ போன்ற பகுதியைச் சேர்ந்த 19,20,மற்றும் 23 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலில் சென்ற போது மற்றொரு குழு தாக்கியதையடுத்தே குழு சண்டையாக உருவெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க