உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பல்கலைக்கழக வங்கி கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் வங்கி கணக்கறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு,இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி நாளை மறுநாள் 20ஆம் திகதி இந்த வங்கிக் கணக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இதில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த நிர்மாணம் தொடர்பில் வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பில் தகவல் தருமாறு ஆணைக்குழு, இலங்கை வங்கியின் கொடுப்பனவுகள் தொடர்பான நடவடிக்கை முகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி தினியாவெல பாலித தேரர் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை செய்திருந்தார்.

இந்த பல்கலைக்கழகத்துக்கான கணக்கு இலங்கை வங்கியின் கொழும்பு கொள்ளுப்பிட்டி கிளையில் திறக்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க