வெளிநாட்டு செய்திகள்

துபாயில் சோகம்

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் பாடசாலை மாணவர் ஒருவர் பேருந்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பைசல் என்பவர் துபாயில் பெரும் தொழில்கள் நடத்தி வருகிறார் . இவரின் மகன் முகமது பர்கான் , அல்குவாஷ் பகுதியில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தார் . வழமை போல் பேரூந்தில் பாடசாலை சென்ற அந்த சிறுவன் வீடு திரும்பவில்லை . பேருந்தில் இருந்த அனைவரும் பாடசாலையில் இறங்கி விட்டிருந்தனர் . குறித்த சிறுவன் இறங்காமல் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் , சாரதி பேருந்தை பூட்டி விட்டு சென்று விட்டார் . பாடசாலை முடிந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வந்த போது சிறுவன் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் . இதனையடுத்து காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்து தெரிவிக்க