உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட உயர்தர பிரிவு மாணவி வைத்தியசாலையில் பலி

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிhவிற்குட்பட்ட கிரான்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்p மீட்கப்பட்ட உயர்தர பிரிவு மாணவி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் பலியானார். இச்சம்பவம் இன்று(17) காலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 16வயதுடைய உயர்தரப் பிரிவு மாணவியான சந்திரசேகரம் மீரா என்பவரே இவ்வாறு பலியானதாக தெரியவருகிறது.
தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலி; வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க