உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மணல் டிப்பர்களுடன் இருவர் விசேட அதிரடிப்படையினாரல் கைது

சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.
மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு டிப்பர் வாகனங்களும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை மாற்றி காத்தான்குடி பிரதேசத்திற்கு மணலை கடத்திச் சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்களும் டிப்பர் வாகனமும் காத்தான்குடி பொலிசாரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்;டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களும் வாகனமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க