உலகம்

தலிபான்கள் மூன்று நாட்கள் யுத்த நிறுத்த அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று ஆரம்பமான முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாளையொட்டி தலிபான்கள் அந்நாட்டு அரசுடன் மூன்று நாள் யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை வரவேற்றிருக்கும் ஜனாதிபதி அஷ்ரப் கானி, தமது படையினர் இந்த யுத்த நிறுத்தத்தை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ் அறிவிப்பினைத் தொடர்ந்து நாட்டில் வன்முறைகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட போதும், வன்முறைகள் அதிகரித்தமை குறிப்பிடத் தக்கது.

கருத்து தெரிவிக்க