வடக்கு செய்திகள்

முல்லைத்தீவு அழககக் கூட்டுறவுச் சங்கத்தினரின் விசேட கூட்டம்.

முல்லைத்தீவு மாவட்ட அழககக் கூட்டுறவுச் சங்கத்தினரின் விசேட கூட்டம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட அழககக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சண்முகம் – சிவகுமார் தலைமையில் கூட்டுறவுச் சங்க தலைமைக் காரியாலயத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில், சங்கத்தினுடைய அபிவிருத்தி, மற்றும் குறைபாடுகள், சங்கத்தினால் அங்கத்தவர்களுக்கு செய்யப்படும் சேவைகள் தொடர்பிலும் பேசப்பட்டது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைத் தலைவர் க.தவராசா, கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுபபினர் சி.லோகேஸ்வரன், மற்றும் கூட்டுறவு உதவி ஆணையாளர் சிங்கநாயகம்,சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், காவற்றுறை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க