மலையகச் செய்திகள்

அட்டனில் தானம் வழங்கும் நிகழ்வு

பொசொன் பௌர்ணமி தினத்தையொட்டி அட்டன் பகுதியின் பல பாகங்களிலும் தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அட்டனில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ் கீரிம் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, அட்டன் ஞாயிறு சந்தை தொகுதியினரின் ஏற்பாட்டில் பிரைட் ரைஸ் தானம் வழங்கப்பட்டது. அத்தோடு அட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரிகளால் புகையிரதத்தில் பயணித்த பயணிகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் சர்வ மதத்தலைவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினர்.

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விகாரைகளில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க