உள்நாட்டு செய்திகள்புதியவை

பொசன் பௌர்னமி – அனுராதபுரம், மிஹிந்தலை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

பொசன் பௌர்னமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்காக நான்காயிரத்திற்கு அதிகமான பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அனுராதபுர நகர பகுதிகளில் 20 இடங்களில் வாகனத் தரிப்பிற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மிஹிந்தலை நகர பகுதிகளில் 6 இடங்களில் வாகனத் தரிப்பிற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க