உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரசியல் பரபரப்பு! 18 இல் கூடுகிறது சபை! கட்சிகள் கொழும்பில் பேச்சு!

நாடாளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை நடைபெறும் ஜுன் மாதத்துக்குரிய 2ஆவது வார சபை அமர்வில் விவாதிக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக திங்கட்கிழமை (17) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து கூட்டு எதிரணி கேள்வி எழுப்பும் என தெரியவருகின்றது.

ஏதேனும் காரணத்தினால் திங்களன்று இக்ககூட்டம் நடைபெறாவிட்டால் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் கொழும்பில் நடைபெறவுள்ளன.

இதன்போது சமகால அரசியல்  தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

அத்துடன், 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க