உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இறுதி யுத்தத்தின்போது கைவிடப்பட்ட தேசி அடையாள அட்டை ஒன்று மீட்பு

இறுதி யுத்தத்தின்போது கைவிடப்பட்ட தேசி அடையாள அட்டை ஒன்று செம்மன்குன்று பகுதியில் இருந்து இன்று மீட்க்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம், திருப்பழுகாமம் என்னும் இடத்தை சேந்த அழகரெத்தினம் சந்திரகுமாரி (வயது44) என்பவருடைய தேசிய அடையாள அட்டை ஒன்றே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – செம்மன்குன்று பகுதி விவாசாயி ஒருவர் அவருடைய சொந்தக்காணி ஒன்றில் விவாசாயம் செய்வதற்காக சீராக்கியுள்ளார்
இதன்போது இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சில உடமைகளுடன் குறித்த ஆள் அடையாள அட்டை மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறு மீட்க்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை அம்பலவன் பொங்கணை கிராம சேவையாளரிடம் குறித்த விவசாயி இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்து தெரிவிக்க