உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாதத்தைத் தடுப்பது குறித்து இலங்கை – தஜிகிஸ்தான் பேச்சு

சிறிய நாடுகளின் பாதுகாப்பு குறித்தும் பயங்கரவாதத்தைத் தடுப்பது குறித்தும் இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தஜிகிஸ்தான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மோனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை தஜிகிஸ்தானின் துஷன்பே நகரில் இடம்பெற்றது. சந்திப்பின் போது பேசப்பட்ட விடங்கள் குறித்து ஜனாதிபதி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தஜிகிஸ்தான் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கருத்து பரிமாறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு தொடர்பில் தஜிகிஸ்தான் தலைவருக்கு நல்ல அனுபவங்கள் உள்ளன. மோதல்களை கட்டுப்படுத்துவது குறித்தும் அவருடன் பேசப்பட்டது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க