வெளிநாட்டு செய்திகள்

5 பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை

அமெரிக்காவின் சௌத் கரோலைனா (South Carolina) மாநிலத்தில் தன்னுடைய 5 இளம் பிள்ளைகளைக் கொன்றவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலான விசாரணைகளுக்கே நேற்று முன் தினம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையின் பின் நீதிபதி குழு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

8 வயதுக்குட்பட்ட 5 பிள்ளைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜோன்ஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் எனவும் ஒரு குழந்தை எவ்வாறு கொல்லப்பட்டதென்பது தெளிவின்றி உள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க