உள்நாட்டு செய்திகள்புதியவை

இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க