உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடரும் மழை – டெங்கு நோய் பரவும் அச்சுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அச்சுறுத்தல் இருப்பதாக சுகாதார சேவைகள் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுப் புறங்களில் நீர் தேங்கி நின்று நுளம்புகள் பெருகுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க