உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம்: சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான நடைமுறைகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையை பெறுமாறு பிரதமர் தமது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக ஒரு நிறுவனத்தை பல்கலைக்கழக சட்டம் 70வது பந்தியின்கீழ் பொறுப்பேற்க முடியும்.

எனினும் இது இன மற்றும் மத பிரச்சினையுடன் தொடர்புடையது என்ற காரணத்தினால் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகத்திலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும் இலங்கையில் அவர்கள் சிறுபான்மையினர் என்று கிழக்கின் முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் விடுத்திருந்த அறிக்கை ஒன்று பிரதமரின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியமை குறி;ப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க