உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் இந்த நிலைக்கு 19ஆவது அரசியலமைப்பே காரணம்!

19ஆவது அரசியலமைப்பின் ஊடாக நாடு தற்போது முடங்கி கிடப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது 19ஆவது அரசியலமைப்பு குறித்து இவ்வாறு கூறினார்.

19ஆம் அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டமையால் நாடாளுமன்றத்தை ஒன்று கூட்ட முடியாமல் போயுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், அமைச்சரவைக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கும் 19ஆவது அரசியலமைப்பே காரணம். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க