ஜோதிடம்

சனி கொடுத்தால் எவர் தடுப்பர் – 7

 

– தமிழகத்தில் இருந்து குணா

இறைவன் பல விஷயங்களை நம் விருப்பப்படியே நடத்திக்
கொள்ள அனுமதித்து இருக்கிறான். நம்மை அழகுபடுத்திக்கொள்ள
லாம். நம் எண்ணங்களை ஒழுங்கு படுத்திக்கொள்ளலாம்.
நமது பழக்கவழக்கங்களை வரையறை செய்து கொள்ளலாம்.
நம் படிப்பால் நம்மை உயர்த்த முயற்சிக்கலாம். எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான்!
ஏனெனில் நாம் வாழ்வென்பதே நமது முற்பிறப்புகளில் ஏற்பட்ட கர்மாவின் தாக்கம்தான் என்கிறது
ஜோதிடம்!

அதனால்தான் வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவங்களையும் நாமே
தீர்மானிக்க முடியாமல் போகிறது. அனைத்தையும் நமது முற்பிறப்பு
களின் கர்மாவே தீர்மானிக்கவேண்டும் என்ற நுட்ப விதியினை
இறைவன் ஏற்படுத்தி யிருக்கிறார். அதில் சனியே பிரதான பங்கு
வகிக்கிறது! அதிலும் ஏழாமிட சனியென்றால் கேட்கவே
வேண்டாம்! அவ்வளவு அதிரடிகளை உண்டு பண்ணி விடுவார்
‘திக்’ பலம் படைத்த ஏழாமிட சனிபகவான்!
சரி, சனி ஏழில் இருந்தால் என்னென்ன பலன்கள் நடக்குமென்
பதை பட்டியலிடுவோம்
1. அந்திய மதம் சார்ந்த வாழ்க்கை துணைவி. 2 வயதில் மூப்பான
வாழ்க்கை துணைவி. 3 கறுத்த நிறமுள்ள வாழ்க்கை துணை.
4 உறவுகள் ஏதுமில்லா (அ) அனாதையாக உள்ள வாழ்க்கை
துணைவி. 5 பிடிவாதம் கொண்ட வாழ்க்கை துணை. 6 உடல்
ஊனமுற்றவர் (அ) மாற்றுதிறனாளி என்று அழைக்கப்படும்
துணை. 8 தாழ்வு மனப்பான்மை உள்ள வாழ்க்கை துணை.
இது என்ன….இப்படியெல்லாம் தீர்க்கமாக சொல்ல முடியுமா
என்றால்….சொல்ல முடியும்இறைவனின் கருணையிருந்
தால்! ஏனெனில் சில ஜோதிடர்கள் தாங்களும் கர்மாபடி வாழவே
பிறந்துள்ளோம் என்பதை மறந்து தாங்கள் ஜோதிடக்கணக்கு மேல்
வைத்துள்ள பெரும் நம்பிக்கையால் அகந்தையுடன் ஜோதிடம்
கூறுகின்றார்கள்! அது முற்றிலும் தவறானதாகும்! அகந்தை எங்கிருக்கிறதோ அங்கே சனி விளையாடுகிறார் என்றே அர்த்தம்!
அதை ஒரு அனுபவத்தின் வாயிலாக சொல்ல விரும்புகின்றேன். தமிழ் திரைதுறையில் எனக்குள்ள பல நண்பர்களில்
காதல் சரவணன் என்பவரும் ஒருவர். காதல் படத்தில் வரும்
நாலு இட்லி  கொஞ்சம் கெட்டிசட்னி’ என்று உதவி இயக்குநர்
கதாப்பாத்திரத்தில் அவர் பேசிய வசனம் மிகவும் பிரசித்தமானது!
அவருக்கு வயது 41 நடந்து கொண்டிருந்தபோதுதான் அவரது
ஜாதகத்தை நான் பார்க்க நேர்ந்தது! அவர் திருமணமாகாதவர்! அவருடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்த பின்பு உங்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடந்துவிடும் என்றும் வரக்கூடிய பெண் உங்களைவிட பத்திலிருந்து பதினைந்து வயது இளையவளாய் இருப்பார் என்றும் அவர் முஸ்லீமாகவோ அனாதையாகவோ
அல்லது உடல் ஊனமுற்றவராகவோ இருப்பதற்கே வாய்ப்பு என்றும் நான் பலன் சொன்னேன். காரணம் அவருக்கு ஏழில் சனி!
அதுமட்டுமின்றி காதல் திருமணம் செய்வீர்கள் என்றும் கூறினேன்.
அவர் நம்பவில்லை. என்னையும், அவரையும் தெரிந்த
ஒரு சில நண்பர்கள் “ அவருக்கு வழுக்கை வயதும் அதிகம்!
இவரை யார் காதலிக்க முன்வருவார்கள்? சொல்லுவதை
பொருந்த சொல்லக்கூடாதா?” என்று ஆதங்கப்பட்டார்கள்.

“ அவரது ஜாதகத்தில் உள்ள ஏழாமிட சனியும் மற்ற கிரகங்களும் தான் இதை சொல்ல வைக்கிறது! ஆளை பார்த்து பலன் சொல்வது ஜோதிடமாகாது” என்று பதில் சொன்னேன்.
இதற்கிடையில் தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ஜோதிடரொருவர் ஏதோ காரணத்திற்காக ‘காதல் சரண வன்’அறையில் ஓரிரவு தங்க நேர்ந்தது! அவர் இவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு ‘ உங்களுக்கு திருமணமே நடக்காது! திருமணமின்றி யாரையாவது சேர்த்துக்
கொண்டுதான் வாழ்வீர்கள். அதுமட்டுமின்றி உங்களுக்கு புத்திர பாக்கியமே கிடையாது’ என்று கூறிவிட என்பாடு திண்டாட்டம் ஆனது.
கிட்டதட்ட ஒரு நாள் முழுக்க என்னிடம் புலம்பினார். இடையிடையே நீங்கள் என் நண்பரென்பதால் ஆறுதலுக்காக இப்படி பலன்கள் சொல்லியிருக்கின்றீர்கள்’ என்ற
குற்றச்சாட்டு வேறு! நான் ‘இல்லை’ என்று மறுக்க.’அப்படியெனில் எப்போது திருணம்?’ என்று கிடுக்குப்பிடி போட..’ வரும் தை மாதத்துக்குள்ளாக முடியும்’ என்றேன். இது நடந்தது 2012 மார்ச் மாத்தில்! ஆனால் செப்டம்பர் 2012 முதல் வாரம்வரை எந்த சலனமும்
இல்லை அவரது வாழ்வில் ! திருமணம் நமக்கில்லை ‘என்ற
முடிவுக்கே வந்து விட்டார் அவரும்!

ஆனால் அம்மாத இறுதியில் சனியின் திருவிளையாடல் அவரது வாழ்வில் நடந்தே விட்டது! இளவயது பெண்ணொருவர் திடீரென அவரது வாழ்வில் குறுக்கிட்டார்! தை மாதத்துக்கும் முன்னதாகவே அவரது திருமணம் நடந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கும் அவரது மனைவிக்கும் 14 வயது வித்தியாசம்! காதலித்த பின்புதான் திருமணம் செய்தார்கள். அதையும்விட முக்கியமானது அவரதுமனைவி உடல் ஊனமுற்றவர்! அதாவது மாற்று திறனாளி! இப்போது இருவரும் இரு ஆண்குழந்தைகளுடன்
அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

ஆக சனி கொடுத்தால் எவரால் தடுக்க முடியும்! அதுமட்டுமின்றி
ஏழாமிடத்து சனி எவரால் பார்க்கப்படுகின்றது. ஏழாமிடத்து
அதிபதியானவர் எவருடனும் இருக்கிறார் – எவரால் பார்க்கப்படு
கின்றார் என்பது குறித்தும் பலன்கள் வித்தியாசப்படும்! இவருக்கு இளவயதுடைய மனைவி அமைந்தது போல!
இப்படி ஏழாமிட சனி பற்றி சொல்லிக் கொண்டேபோனால்
அது சமுத்திரத்தைக் காட்டிலும் பெரிதாய் போய்விடும் என்பதால்
ஆறாமிட சனி எட்டாமிட சனியின் தொடர்பு மற்றும் பலன்களுக்கு
போய் விடலாம்.
அடுத்த இதழில்

கருத்து தெரிவிக்க