உள்நாட்டு செய்திகள்புதியவை

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் மீண்டும் வழிபாடுகள்!

தாக்குதலில் பாரியளவில் சேதமான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மீண்டும் இன்று புதன்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், கிறிஸ்தவ தேவாலயங்களும் மேலும் பல உடமைகளும் சேதமாக்கப்பட்டிருந்தன. இதன் மீள்நிர்மாணப்பணிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி, பாரிய சேதத்துக்குள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 

கருத்து தெரிவிக்க