பதவி விலகிய மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் குறித்த மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக விஷேட முறைப்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் இறுதி நாளான இன்று மாலை 4 மணிவரை முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 11 முறைப்பாடுகளும் ஆசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க