உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ராஜித சேனராத்தினவுக்கு எதிராக மன்னார் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி   இன்று  மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 30 நிமிடங்கள் வரை குறித்த போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் ஏந்திய பதாகைகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.
குறிப்பாக வடக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கு எல்லாம் நாறல் மருந்து ராஜிதவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையா?, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்து தெரிவிக்க