உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜே.வி.பி.யால் கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

மக்கள் விடுதலை முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியினால் கொழும்பு, மருதானை ஹோல்கொட் மாவத்தை டெக்னிகல் சந்தி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் அந்த இடத்திலிருந்து கொழும்பு கோட்டை பகுதிக்கு செல்ல திட்டமிட்டிருந்ததனாலேயே இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணமே ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால் அதனை அண்டிய பகுதிகளிலும் வாகன நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க