வெளிநாட்டு செய்திகள்

போதைப் பொருள் குற்றச்சாட்டுகளில் இருந்து ரஷ்ய ஊடகவியலாளர் விடுதலை

கைது செய்யப்பட்ட ரஷ்ய ஊடகவியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து நீக்கப்பட்டதுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

போதைப் பொருள் கைமாற்றல் சந்தேகத்தின் பேரில் 36 வயதையுடைய சுயாதீன செய்தியாளரான கொலுனோவ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவர் லாட்வியாவை தளமாக கொண்ட புலனாய்வு செய்தி இணையத்தளமான மெடுஷா உள்ளிட்ட சில ஊடகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கொலுனோவ் பொலிஸ் நிலையத்தில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட போது கண்ணீர் மல்க வெளியே வந்தார்.

எது எவ்வாறு இருப்பினும் தனது புலனாய்வு ஊடகவியலாளர் பணியை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க