உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தஜிகிஸ்தான் செல்கிறார்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தஜிகிஸ்தான் செல்லவுள்ளார்.

இவர் நாளைய தினம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் நடைபெறும், ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆண்டு 15 ஆவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. ஜூன் 14, 15ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க