உள்நாட்டு செய்திகள்புதியவை

மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் இன்றுடன் நிறைவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான முறைப்பாட்டு பதிவுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று புதன்கிழமை மாலை 4 மணியுடன் முறைப்பாடுகளை எழுத்துமூலமாக பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக இதுவரை 12 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளை பதிவு செய்யும் விஷேட பொலிஸ் குழு தெரிவித்துள்ளது.

இதில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக 6 முறைப்பாடுகளும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக 3 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவானவற்றில் சில முறைப்பாடுகள் அரசியல்தரப்பு சார்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கான பொலிஸ் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க