விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெறுமா..?

போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று அதன் மூலம் புள்ளிகளைப் பெறவே விரும்புகின்றோம் என இலங்கைக் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண தொடர்களில் இலங்கை அணி 4 லீக் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, இரண்டு சமனிலை என 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் போட்டிகளில் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுடன் விளையாடவுள்ளோம். அந்த அணிகளுக்கு சவால் கொடுப்பதற்கு நாங்கள் இன்னும் தயாராக வேண்டும் எனவும் கூறினார்.

மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்த தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க