உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாளை சாட்சியமளிக்கிறார்கள் ஹிஸ்புல்லாஹ், என்.கே. இலங்கக்கோன்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை நடைபெறவுள்ளது.

அதன்படி நாளைய தினம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் அங்கம் வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க