உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கை அபிவிருத்தியில் பின்னடைவு – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது நாட்டின் பாதுகாப்பு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இலங்கை அபிவிருத்தியில் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க