உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டா – ரணில் சந்திப்பு – சிங்கப்பூர் பறந்தார் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் நோக்கி இன்று முற்பகல் பயணித்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது சிங்கப்பூர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சையை பூர்த்திசெய்து அங்கு தொடர்ந்தும் மேலதிக சிகிச்சைப்பெற்று வருகின்ற முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருபவருமான கோட்டாபய ராஜபக்சவையும் பிரதமர் சந்திக்க உத்தேசித்துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி பிரதமர் ரணில் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க