உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதியை அழிப்பதற்கு சிலர் முயற்சி: தயாசிறி ஜெயசேகர

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

இந்தநிலை தொடர்வதன் காரணமாக ஜனாதிபதியின் கருத்துக்கு நாடாளுமன்றில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க