உள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இலங்கை உட்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்பட தயார்-சீனா

இலங்கை உட்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க-சீன வர்த்தக போர் உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில் இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஸுகேயுங் (Cheng Xueyuan ) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”திறந்த உலகப் பொருளாதாரத்தையும், பொருளாதார பூகோளமயமாக்கலையும் கட்டியெழுப்புதல், பாதுகாத்தல், மற்றும் இருதரப்புகளும் வெற்றியடையும் வகையிலான பொருளாதார திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்த சீனா ஆர்வமாக உள்ளது.

சீனா மீது அமெரிக்காவின் வரி அதிகரிப்பு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான மொத்த வர்த்தக அளவைக் குறைத்துள்ளது, ஆனால் இருதரப்பு வர்த்தக பற்றாக்குறையும் அடிப்படையில் மாற்றம் காணவில்லை.

எனவே பலம் வாய்ந்த நாடுகளின் ஆதிக்கத்துக்கு முகம் கொடுக்க நாம் இணைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது ” என சீன தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க