இலங்கை

வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் நாளை தென்படும்!

நாளைய தினம் ஏற்படவுள்ள இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரகணகத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில், யாழ்.நெடுந்தீவை அண்மித்த பிரதேசங்களில் காலை 10.30 மணியளவில் சூரிய கிரகணகம் தென்படும். மேலும், கொழும்பில் காலை 10.29இற்கு சூரிய கிரகணகம் தென்படும் என்பதுடன் மு.ப. 11.51 மணியளவில் சூரிய கிரகணம் முழுமையடைந்து 1.50 மணிக்கு முடிவடையும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படும். கொழும்பிலிருந்து சூரியனை பார்க்கும் போது சூரியன் சந்திரனால் 16.5 வீதம் மறைக்கப்படுவதைக் காணலாம்.  மேலும் இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டாம் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க