உலகம்

சிங்கப்பூரில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று!

சிங்கப்பூரில் இன்று புதிதாக 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிங்கப்பூரில் நோய் பாதிப்புகள் அதிகமாகி வருவதால், நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதுடன் , மேலும் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிங்கப்பூரில் 41,615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்தியா உட்பட பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் எனவும், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32,712 பேர் குணமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க