வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் செவந்த் அவென்யூ எனும் கட்டடம் ஒன்றில் ஹெலிகொப்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மழையின்போது குறித்த 50 மாடி கட்டடத்தில் ,ஹெலிகொப்டர் மோதியதில் தீ பரவி இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் விமானியாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

கட்டடத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நியூ யோர்க் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

கருத்து தெரிவிக்க