சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இந்திய இராணுவத்தின் தாக்குதல் அச்சம்.பாகிஸ்தான் முகாம்கள் மூடப்பட்டன.

இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடியுள்ளதாக இந்திய இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத இயக்கங்கள் தமது முகாம்களை கொண்டிருந்தன.

இந்த முகாம்களின் ஊடாக அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வான் தாக்குதல்களை நடத்தியது.

இதனையடுத்தே தற்போது அந்த பயங்கரவாத முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க