இலங்கை

சுமந்திரன் தொடர்பாக யாழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் எச்சரிக்கை !

இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.

அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  தமிழ் மக்கள் மிகவும் சிந்தித்து தமது தலைமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு காலம் இது. யார் தமிழ் மக்களின் தலைவராக வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க, யார் யாரெல்லாம் தமிழ் மக்களின் தலைவராக வரக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டிய சந்தர்ப்பம் இது. அந்தவகையில் சுமந்திரன் என்ற நபர் விடயத்தில் யாழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என்று இந்தப் பிரசுரத்தின் ஊடாக எச்சரிக்கை விடுக்கின்றோம் என்று அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கருத்து தெரிவிக்க