இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சற்றுமுன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1947 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 18 பேர் டுபாயிலிருந்து இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ஏனையவர்களுள் கட்டாரில் இருந்து வருகை தந்த இருவர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் ரஷ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலு‌ம், இதுவரை 1421 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க