உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சீரற்ற காலநிலை தொடர்ந்து சில நாட்களுக்கு நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளமை
மேல்இ தென்இ மத்தியஇ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்குஇ வடமத்தியஇ மற்றும் வடமேல் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
அதேவேளை நாட்டின் வடக்குஇ தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க