மலையகச் செய்திகள்

பாதையை தாமே சீரமைக்கும் சீன் தோட்ட கொலனி மக்கள்

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட சீன் தோட்ட கொலனி பகுதி பாதையை மக்கள் தாமே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த மக்கள் கருத்து  தெரிவிக்கையில், நீண்ட காலமாகவே இந்த பாதை கவனிப்பாரின்றி இருந்து வருகின்றது.பயணிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

இப்பாதையை புனரமைத்து தருமாறு பல அரசியல்வாதிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால்  பாதையை சீரமைக்க நாமே முன்வந்துள்ளோம்.

பாதையை சீரமைக்கும் நோக்கில் சிரமதமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்முடைய பிரச்சினைகளுக்கு எந்த தலைவரும் தீர்வு காணாத நிலையில் இனி வாக்கு சேகரிக்க வருவோருக்கு தக்க பதிலடியை கொடுக்க இருக்கிறோம் என சீன் தோட்ட கொலனி மக்கள் மேலும் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க