இலங்கை

பட்டபகலில் கைவரிசையை காட்டிய திருடர்கள் தாயின் உதவியுடன் கைது!

அம்பாறை மாவட்டத்தில் வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் 15ம் திகதி அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில் பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைத்தொலைபேசிகளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். குறித்த கொள்ளையர்கள் கைத்தொலைபேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை சிசிடிவி காணோளி காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட பொலிஸார் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களை தாயின் உதவியுடன் கைது செய்தனர். குறித்த கைது நடவடிக்கையின் போது கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க