உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் மக்களை ஒதுக்கிவிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது.

சமூக பொருளாதார மற்றும் அரசியலில் தமிழ் மற்றும் முஸ்லி;ம் சமூகங்களை தனிமைப்படுத்திவிட்;டு பிரச்சனைகளுக்கு தீர்வைக்காண முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசி;ங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் பத்தேகமையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த குழுக்களை அமைத்து சந்தேகங்களை அகற்றக்கூடிய யோசனை ஒன்றை தாம் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து சில முஸ்லிம்கள் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

இது தற்போது பாரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த நாடு சிங்களவர்களுக்குரியது என்ற தோற்றம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனை தவிர்த்து அனைத்து மக்களுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படவேண்டும் என்று ரணில் விக்;கிரமசிங்க தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க