உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து மோடியுடன் பேச்சு!

இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் பேசப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலையில் காணப்படும் இழுபறிகள், வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்வில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்படும்” என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க