உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலங்கையிலுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக ஒழிக்க இஸ்ரேல் முன்வருகிறது

இலங்கையிலுள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை முற்றாக அழிக்க இஸ்ரேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் உதவியை வழங்க அந்நாடு முன்வந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் அந்த நாட்டிலுள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே தமது யமாம் பொலிஸ் பிரிவின் மூலம் உதவி வழங்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலினால் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தித் தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க