உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் தாக்குதல் – உளவுத்தகவல்களை வழங்கியவர்களிடமும் வாக்குமூலம்!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய குழு குறித்த உளவுத்தகவல்களை வழங்கிய நான்கு பேர்  நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 11 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் குறித்த குழு கூடவுள்ள நிலையில், இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

மேலும், தகவல்கள் வழங்கப்பட்ட காலப்பகுதி, அது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பன குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க